மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் ஆந்திரா செல்ல குவிந்த பயணிகள்
2022-10-24@ 00:35:54

திருவொற்றியூர்: தீதீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாதவரம் புறநகர் ஆந்திரா பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர், திருப்பதி, சூலூர்பேட்டை ,கடப்பா மற்றும் திருவள்ளூர், பழவேற்காடு பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாதவரம் , மணலி,செங்குன்றம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மாதவரம் புறநகர் ஆந்திரா பேருந்து நிலையம் வந்து பேருந்துகளில் ஏறி செல்கின்றனர்.
இவ்வாறு செல்லக்கூடிய பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, கொளத்தூர் காவல் ஆணையர் ராஜாராம், தலைமையில், புழல் காவல் உதவி ஆணையர் ஆதிமூலம்,மாதவரம் காவல் இன்ஸ்பெக்டர் காளிராஜ் ஆகியோர் மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் வெளியூர் செல்லும் பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் மற்றும் பயணத்தின் போது தங்கள் உடைமைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகள்
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை காவேரி மருத்துவமனையில் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு?: சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் தகவல்
தமிழகத்தில் நடப்பாண்டில் ரூ.1,406 கோடியில் 150 கி.மீ., சாலை பணிகள் விரிவாக்கம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தில் பொதுமக்கள் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு
லட்சக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச்செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி