பஞ்சாபில் பழைய ஓய்வூதிய திட்டம்: முதல்வர் மான் தீபாவளி பரிசு
2022-10-22@ 01:31:39

சண்டிகர்: பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் மான் அறிவித்துள்ளார். பஞ்சாபில் அமலில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்படி அரசை வலியுறுத்தி வருகின்றனர். இம்மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தனது கட்சி வெற்றி பெற்றால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்தது.
அதன்படி, வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் பகவந்த் சிங் மான் கூறுகையில், ‘‘அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்பெறுவார்கள்,’’ என்றார்.
மேலும் செய்திகள்
2024 மக்களவை தேர்தல் மம்தா பானர்ஜியுடன் குமாரசாமி ஆலோசனை
வாரணாசியில் மோடி அறிவிப்பு 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு
பாஜ, காங்கிரஸ் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது
புதிதாக 1249 பேருக்கு கொரோனா
ஒன்றிய அரசுக்கு எதிரான 14 எதிர்க்கட்சிகள் மனு ஏப்.5ல் விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
அதானி விவகாரத்தில் விசாரணை கேட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி 40 எம்பிக்கள் அதிரடி கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி