காந்தாரா ரிஷப் ஷெட்டியின் பான் இந்தியா படம்
2022-10-21@ 02:03:39

ஐதராபாத்: காந்தாரா படத்தின் ஹீரோவும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டியின் அடுத்த படத்தை அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, காந்தாரா என்ற கன்னட படத்தை இயக்கி, நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபீசில் பெரும் பாய்ச்சலாக வெற்றி பெற்றுள்ளது. வெறும் ரூ.10 கோடியில் உருவான படம் வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து இந்த படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டுள்ளனர். தெலுங்கில் இந்த படத்தை அல்லு அர்ஜுனின் அப்பாவும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் வாங்கினார். அவர்தான் படத்தை வெளியிட்டார்.
அவருக்கு பெரும் லாபம் கிடைத்திருக்கிறது. இதையடுத்து தனது கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் ரிஷப் ஷெட்டியை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அவர் அடுத்து இயக்கி, நடிக்கும் படத்தை அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். இது பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
என்.எல்.சி.யில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் குடிநீர் விநியோகம்: பேரவையில் அமைச்சர் லெட்சுமி நாராயணன் அறிவிப்பு
ஆந்திராவில் வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய நபரை கைது செய்து போலீஸ் விசாரணை
அம்ரித்பால் தலைமறைவான இடத்தில் இருந்து வீடியோ வெளியீடு: கடவுள் அருளால் தப்பித்து வருவதாக பேச்சு
அறிய வகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து ஒன்றிய அரசு அரசாணை..!!
தேசிய கீதம் அவமதிப்பு வழக்கு: மம்தாவுக்கு எந்தவிதக் கருணையும் காட்டக்கூடாது மும்பை ஐகோர்ட் உத்தரவு..!!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,000-ஐ தாண்டியது.... ஒரே நாளில் 14 பேர் பலி : ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!