அவசர காலங்களில் உதவுவதற்காக தேசிய நெடுஞ்சாலையில் ‘ஹெலிபேடு’ வசதி: ஒன்றிய விமான துறை அமைச்சர் தகவல்
2022-10-19@ 19:01:25

புதுடெல்லி: அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெலிபேடு வசதி ஏற்படுத்தப்படும் என்று ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறினார். டெல்லியில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சக பிரதிநிதிகளின் மாநாட்டில் ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், ‘நாடு முழுவதும் புதியதாக கட்டமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெலிகாப்டர் தரையிறங்க வசதியாக ஹெலிபேடுகள் வசதிகள் செய்யப்படும்.
நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காகவும், அவசர காலங்களில் உதவுவதற்காகவும் இந்த ஹெலிபேடுகள் உதவும். இதற்காக சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேற்குவங்கம், டெல்லி, பஞ்சாப் ஆகிய 8 மாநிலங்களில் விமான இணைப்பை எளிதாக்க வசதியாக, ஏர் டர்பைன் எரிபொருள் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், இந்த எட்டு மாநிலங்களுக்கும் விமான இணைப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா காலத்திற்கு முன்பு இந்தியாவில் தினமும் 4 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணித்தனர். இந்த சாதனை தற்போது இரண்டு முறை முறியடிக்கப்பட்டுள்ளது. தற்போது 4.1 லட்சம் பயணிகள் வரை எட்டியுள்ளோம்’ என்றார்.
மேலும் செய்திகள்
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10-ம் தேதி நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
பூதலப்பட்டு- நாயுடுப்பேட்டை இடையிலான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் உண்ணாவிரதம்-பலரது உடல்நிலை பாதிப்பு
ஆணையர் தலைமையில் பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி திட்ட பணிகளுக்கு ₹273.12 கோடி நிதி ஒதுக்கீடு-மேயர் அமுதா அறிவிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் ரூ.500 நோட்டுகளை வீசியெறிந்த காட்சிகள் வெளியீடு
ராகுல் காந்திக்கு வழிகாட்டுகிறதா ஐகோர்ட் தீர்ப்பு?.. காங்கிரஸ் கட்சி எம்.பி. முகமது ஃபைசலின் தகுதி நீக்க உத்தரவு ரத்து..!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!