போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
2022-10-19@ 01:23:25

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் எல்லை பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள பாரத் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
இதில், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை தடுப்பு குறித்த பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கல்லூரியில் இருந்து கேம்ப் ரோடு வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தனர்.
மேலும் செய்திகள்
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை காவேரி மருத்துவமனையில் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு?: சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் தகவல்
தமிழகத்தில் நடப்பாண்டில் ரூ.1,406 கோடியில் 150 கி.மீ., சாலை பணிகள் விரிவாக்கம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தில் பொதுமக்கள் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு
லட்சக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச்செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி