மும்பை விமான நிலையம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படுவதாக அறிவிப்பு: விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றம்
2022-10-18@ 12:52:58

மும்பை: மும்பை விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் புதுடெல்லிக்கு அடுத்தபடியாக, அதிக எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்படும் விமான நிலையங்களில் மும்பை உள்ளது.
மும்பை விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 800 விமானங்கள் இரண்டு ஓடுபாதைகள் வழியாக இயக்கப்படுகின்றன. மும்பை விமான நிலைய தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டு, அதானி குழுமத்தின் கீழ் இயங்குகிறது. இந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் நடைபெறும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 6 மணிநேரம் விமான நிலைய ஓடுபாதை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகளிலும் பருவமழைக்கு பிந்தைய தடுப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பல விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வெறுப்பு பேச்சு முடிவுக்கு வர அரசியலில் மதத்தை பயன்படுத்த கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுரை
நாளை மறுநாள் முதல் 1000 மருந்துகள் விலை 11% உயர்கிறது
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்: வன பாதுகாப்பு திருத்த மசோதா தாக்கல்
வெளிநாடுகளில் இருந்து தமிழ் நாடு என்ஜி ஓக்களுக்கு 3 ஆண்டில் ரூ. 6804 கோடி நிதி: ஒன்றிய அரசு தகவல்
கூகுளுக்கு ரூ. 1,337 கோடி அபராதம்: கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு
கிரிமினல் வழக்கில் உயர் நீதிமன்ற தடை எதிரொலி லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தகுதி நீக்கம் வாபஸ்: மக்களவை செயலகம் அறிவிப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!