இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் சிறுவன் கைது
2022-10-18@ 01:32:00

அண்ணாநகர்: சூளைமேடு பகுதியை சேர்ந்த சாந்தி (43, பெயர் மாற்றப்பட்டுள்ளது), சூளைமேடு காவல் நிலையத்தில் கடந்த 14ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது 15 வயது மகளை காணவில்லை, என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சிறுமியை, 17 வயது சிறுவன் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் செல்போன் சிக்னல் மூலம் அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சூளைமேடு மார்க்கெட் அருகே, இருவரும் சுற்றித்திரிவது தெரிய வந்தது. நேற்று அதிகாலை அந்த பகுதிக்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார், இருவரையும் மீட்டு சூளைமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர்.
அதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இந்த சிறுவன், இன்ஸ்டாகிராம் மூலம், கடந்த 3 மாதமாக சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், சிறுமியை கடத்தியது மற்றும் போக்சோ ஆகிய வழக்குகளில் சிறுவனை கைது செய்து, கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். அந்த சிறுமியை அதே பள்ளியில் உள்ள பெண்கள் பிரிவில் சேர்த்தனர்.
மேலும் செய்திகள்
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 5 ஆண்டு கடுங்காவல்
புளியந்தோப்பில் போதைப்பொருள் கடத்தல் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சினிமா பைனான்சியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் கைது
கொள்ளை போனதாக பொய் புகார் 3 கிலோ தங்க நகையுடன் ஊழியர்கள் பிடிபட்டனர்
ஐஸ்வர்யா வீட்டை தொடர்ந்து ரஜினி வீட்டிலும் கைவரிசை புகார் அளித்ததோ 60 சவரன்; பறிமுதலோ ரூ. 3 கோடி நகைகள்: வேலைக்கார பெண், கார் டிரைவரிடம் விடிய விடிய விசாரணை
போலி பெண் டாக்டர் கைது
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!