தொண்டனுக்கு உள்ள உரிமை கூட இனி ஓபிஎஸ்சுக்கு கிடையாது: மாஜி அமைச்சர் சண்முகம் ஆவேசம்
2022-10-18@ 00:07:33

விழுப்புரம்: அதிமுகவில் சாதாரண தொண்டனுக்கு உள்ள உரிமைக்கூட இனி ஓபிஎஸ்சுக்கு கிடையாது என்று மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவின் சட்ட திட்டங்களை மாற்றம் செய்வது குறித்த விவகாரத்தை பேச ஓபிஎஸ்சுக்கு எந்த தகுதியும் இல்லை. சாதாரண அடிப்படை தொண்டனுக்கு உள்ள உரிமை கூட ஓ.பன்னீர்செல்வத்துக்கு இல்லை. தன்னுடைய பதவி ஆசை, சுயலாபத்திற்காக பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து கட்சியிலேயே இல்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை கொண்டு வந்தவர் பன்னீர்செல்வம். எம்.ஜி.ஆரின் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் அதிமுகவின் சின்னத்தை முடக்கியவர்களை மன்னிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
சபாநாயகருடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை..!
கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் : ராகுலின் வயநாடு தொகுதிக்கும் இன்று தேர்தல் அறிவிப்பா?
கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது!!
பதவி பறிபோக காரணமான கோலாரில் ஏப்.5ல் ‘சத்தியமேவ ஜெயதே’ ராகுல் பிரசாரம் தொடக்கம்
ராகுல் தகுதி நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி நாடாளுமன்றம் முடங்கியது: 2வது நாளாக கருப்பு உடையில் வந்தனர்
நாடாளுமன்ற துளிகள்...
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!