தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!: எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் நீடிக்கும் ஓபிஎஸ்..பேரவையை புறக்கணித்த ஈபிஎஸ் அணி..மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்..!!
2022-10-17@ 10:25:30

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்பட மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்துள்ளார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் சபாநாயகர் எந்த மாற்றமும் செய்யவில்லை. சட்டப்பேரவையில் அதிமுக வரிசை இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார்.
எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமி கோரிக்கை ஏற்கப்படவில்லை. வழக்கம் போல் எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் பன்னீர்செல்வம் அமர்ந்துள்ளார். எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஓ.பி.எஸ். இடம் இருந்து பறிக்காததால் பழனிசாமி தரப்பு சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்து சென்றது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியவுடன் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர் திரு எஸ்.சாமிவேலு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!