ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி முர்முவுக்கு கண்புரை ஆபரேஷன்
2022-10-17@ 02:01:05

புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு வடகிழக்கு மாநிலங்களுக்கான முதல் அரசு முறை பயணமாக கடந்த 12ம் தேதி திரிபுரா, அசாம் சென்று இருந்தார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து 14ம் தேதி டெல்லி திரும்பினார்.
இந்நிலையில், அவருக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண்புரைக்கான அறுவை சிகிச்சை நேற்று செய்யப்பட்டது. இது குறித்து ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், `ஜனாதிபதி முர்முவுக்கு இன்று (நேற்று) கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்,’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
2024 மக்களவை தேர்தல் மம்தா பானர்ஜியுடன் குமாரசாமி ஆலோசனை
வாரணாசியில் மோடி அறிவிப்பு 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு
பாஜ, காங்கிரஸ் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது
புதிதாக 1249 பேருக்கு கொரோனா
ஒன்றிய அரசுக்கு எதிரான 14 எதிர்க்கட்சிகள் மனு ஏப்.5ல் விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
அதானி விவகாரத்தில் விசாரணை கேட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி 40 எம்பிக்கள் அதிரடி கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி