அரசியலில் தலைவராக விரும்பும் இளைஞர்கள் கலைஞர் வாழ்க்கை வரலாற்றை படிக்கவேண்டும்: திருமாவளவன் பேச்சு
2022-10-17@ 01:03:23

சென்னை: அரசியலில் தலைவராக வரவேண்டும் என விரும்பும் இளைஞர்கள், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை படித்து அறிந்துகொள்ள வேண்டும், என கொரட்டூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் எம்பி பேசினார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் 2வது முறையாக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், ‘இங்கு இவரை பெறவே யாம் என்ன தவம் செய்தோம்’ எனும் தலைப்பில் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்றார்.
கூட்டத்தில் திருமாவளவன் எம்பி பேசுகையில், ‘திமுக தலைவராக 2வது முறையாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தமிழகத்திற்கு மட்டுமல்ல, வரலாற்று தேவையும்கூட. ஸ்டாலின் கலைஞரின் பிள்ளை என்பதால் இது கிடைக்கவில்லை. 55 ஆண்டுகாலம் ஆற்றிய உழைப்புக்கு கிடைத்த பலன். தனக்கு பின்னர் கட்சியை வழிநடத்த கூடியவர் ஸ்டாலின் தான் என்பதை உணர்ந்து இந்த பொறுப்பை கலைஞர் வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஜவாஹிருல்லா, நாஞ்சில் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர். தற்போதைய சூழலில் அரசியலில் தலைவராக வர வேண்டும் என விரும்பும் இளைஞர்கள் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை படித்து அறிந்துகொள்ள வேண்டும்.
அரசியலில் மனிதர்களை வழிநடத்துவது மிக கடினம். அதிலும் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்து வழிநடத்துவது சவால் நிறைந்தது. ஸ்டாலின். கட்சியை திறம்பட நடத்தி வருகிறார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் ஒன்றுசேர்ந்த கலவைதான் மு.க.ஸ்டாலின். 2024 நாடாளுமன்ற தேர்தலில் சனாதன கட்சியை ஆட்சியை விட்டு ஓடஓட விரட்டவேண்டும். எதிர்க்கட்சிகளின் வாக்கு சிதறாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது,’ என்றார்.
மேலும் செய்திகள்
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை காவேரி மருத்துவமனையில் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு?: சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் தகவல்
தமிழகத்தில் நடப்பாண்டில் ரூ.1,406 கோடியில் 150 கி.மீ., சாலை பணிகள் விரிவாக்கம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தில் பொதுமக்கள் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு
லட்சக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச்செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி