சனாதன தர்மம், இந்து மதம் குறித்த ஆளுநரின் பேச்சுக்கள் ஆர்.டி.ஐ.யில் வராது: ஆளுநர் மாளிகை விளக்கம்
2022-10-15@ 18:58:08

சென்னை: சனாதனம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருவது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து அதனை பின்பற்றுவதே சிறப்பு என அவர் வலியுறுத்தி வருகிறார். இது குறித்து சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி; தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார். அதில் சனாதன தர்மத்தை உருவாக்கியவர் யார்? அதன் கொள்கைகள் என்ன? பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்து என்ற சொல் உள்ளதா? ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுப்பினரா போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.
அமைச்சரவை ஒப்புதல் இன்று பொது நிகழ்ச்சிகளில் பேச அரசியலமைப்பு சட்டத்தில் எந்த விதி அதிகாரம் அளித்தது என்ற கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள ஆளுநர் மாளிகை இந்த கேள்விகள் ஆர்.டி.ஐ. யின் கீழ் வராது எனவும், ஆளுநரின் செயலகத்தில் தகவல்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக துரைசாமி கூறியுள்ளார். சனாதனம் குறித்து அதிகம் பேசும் நபராக ஆளுநர் இருப்பதால் அது குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சரியான நபர் என குறிப்பிட்ட எஸ்.துரைசாமி 19 கேள்விகளை முன்வைத்து ஆர்.டி.ஐ. மனு அனுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்க ஆளுநர் மாளிகை மறுத்துள்ள நிலையில் மாநில தகவல் ஆணையத்தில் துரைசாமி மேல்முறையீடு செய்ய உள்ளார்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் நேற்று நடந்த 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் பேர் ஆப்சென்ட்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் நடைமேடை தடுப்பு கதவுகள்: சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தகவல்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சாலையை சுத்தம் செய்யும் போது திடீரென தீப்பற்றிய மாநகராட்சி வாகனம்..!!
நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலுபதில்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!