3 சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம்; உம்ரான் மாலிக்கை அணியில் சேர்த்திருக்கவேண்டும்: முன்னாள் பயிற்சியாளர் பாரத் அருண் பேட்டி
2022-10-14@ 16:36:11

மும்பை: 7வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உள்பட 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில் மற்ற 4 அணிகள் தகுதி சுற்றில் இருந்து தேர்வு செய்யப்படும். சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 சுற்றில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வரும் 23ம் தேதி எதிர்கொள்ள உள்ளது.
இதனிடையே இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, முதுகு காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் டி.20 உலக கோப்பையில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மூன்று சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அணியில் இருந்திருக்க வேண்டும். உம்ரான் மாலிக் இளம் வீரர். நல்ல வேகத்தில் பந்துவீசுகிறார். ஐபிஎல்லில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.
ஆஸி. மைதானங்களில் பவுன்ஸ் இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆஸ்திரேலியாவில் மிக முக்கிய பங்கு உண்டு. ஆனால் மூன்று ஸ்பின்னர்கள் அதிகம் என்று நினைக்கிறேன். ஏனெனில் எந்த ஒரு கட்டத்திலும் அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பெற முடியும். தேவைப்பட்டால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்யலாம், என்றார்.
மேலும் செய்திகள்
அர்ஜன்டீனா அணிக்காக 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் மெஸ்ஸி!
காலிறுதியில் ரைபாகினா: காயத்தால் விலகினார் பியான்கா
பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி: தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்
சில்லி பாயின்ட்...
புஜாராவை அவுட்டாக்குவது எளிதல்ல: ஹேசல்வுட் புகழாரம்
அருங்காட்சியகத்தில் மெஸ்ஸி சிலை
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!