SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஞ்சாப் போலீஸ் அலுவலகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய தீவிரவாதி மும்பையில் கைது

2022-10-14@ 02:47:17

மும்பை: பஞ்சாப் போலீஸ் உளவுத்துறை தலைமை அலுவலகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய தீவிரவாதி மும்பையில் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம், மொகாலியில் உள்ள போலீஸ் உளவுத்துறை தலைமை அலுவலகம் மீது, கடந்த மே மாதம் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் இல்லை. ஆனால், கட்டிடத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இந்த தாக்குதலுக்கு, சீக்கியருக்கான நீதி (எஸ்எப்ஜே) என்ற அமைப்பு பொறுப்பேற்பதாக அப்போது அறிவித்தது.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக, மும்பை மலாட் பகுதியை சேர்ந்த சரத்சிங் என்ற இந்திரஜித் சிங் காரிசிங் என்ற கராஜ் சிங் (30) என்பவரை, மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புபடையினர் நேற்று கைது செய்தனர். சரத்சிங் மீது 8 வழக்குகள் உள்ளதாகவும், பஞ்சாபில் உள்ள கபுர்தாலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த மார்ச் மாதம் 2 மாத பரோலில் வெளிவந்தார். தற்போது கனடாவில் பதுங்கியியுள்ள தீவிரவாதி லக்பீர் சிங் லண்டாவுடன் தொடர்பில் இருந்ததுள்ளார் என தீவிரவாத தடுப்புப்படை அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்