3 மாதத்துக்கு ஒருமுறை வன்கொடுமைகள் சட்ட செயல்பாடு கண்காணிப்பு தேவை: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவு
2022-10-14@ 00:16:20

சென்னை: வன்கொடுமைகள் தடுப்பு சட்ட செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் மாநில அளவிலான துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் கயல்விழி பேசியதாவது: பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளும் வகையில் செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களை படித்திட விடுதி காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும். மயானம், மயானப்பாதை, சமுதாய நலக்கூடங்கள் ஆகிய திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும். வன்கொடுமைகள் தடுப்பு சட்ட செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் நடத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் தாட்கோ வாரிய தலைவர் உ.மதிவாணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் தென்காசி சு.ஜவஹர், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ஆனந்த், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:
3 months once atrocities legal action monitoring required Minister Kayalvizhi Selvaraj 3 மாத ஒருமுறை வன்கொடுமைகள் சட்ட செயல்பாடு கண்காணிப்பு தேவை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்