நாட்டின் மிகப்பெரிய ஊழல் சாம்ராஜ்யம் கர்நாடகா முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு ஏலம்: ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு
2022-10-12@ 00:14:40

பெங்களூரு: நாட்டில் மிக பெரிய ஊழல் சாம்ராஜ்ய அரசாங்கத்தை ஆளும் பாஜ அரசு கொடுத்து வருகிறது என்று ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி பாதயாத்திரை மேற்கொண்டுவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகாவில் பாதயாத்திரை நடத்தினார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: கர்நாடகாவில் நடந்து வருவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கிடையாது. ஆபரேஷன் தாமரை என்ற ஜனநாயக படுகொலை திட்டத்தின் மூலம் காங்கிரஸ், மஜத கட்சிகளில் இருந்து சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, அவர்கள் தயவில் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சி.
மாநிலத்தில் எந்த வளர்ச்சி திட்டம் செயல்படுத்தினாலும் 40 சதவீதம் கமிஷன் பெறப்படுகிறது. அதை நான் சொல்லவில்லை. கர்நாடக மாநில அரசு ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு ஏலம் போவதாக நான் சொல்லவில்லை. பாஜவை சேர்ந்த மூத்த எம்எல்ஏ ஒருவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மாநிலத்தில் இயங்கிவரும் 13 ஆயிரம் தனியார் பள்ளிகள் உரிமங்களை புதுப்பிக்க 40 சதவீதம் கமிஷன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமனம் செய்ய ரூ.80 லட்சம் ஊழல், பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் நியமனத்தில் ஊழல் என ஊழல் பட்டியல் இமயமலைபோல் உயர்ந்துள்ளது. நாட்டில் மிகப்பெரிய ஊழல் சாம்ராஜ்யம் செய்யும் மாநிலங்களில் பட்டியலில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு ராகுல் பேசினார்.
Tags:
The country's empire of corruption Karnataka Chief Minister's post bid for Rs 2 500 crore Rahul accused நாட்டின் ஊழல் சாம்ராஜ்யம் கர்நாடகா முதல்வர் பதவி ரூ.2 500 கோடிக்கு ஏலம் ராகுல் குற்றச்சாட்டுமேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வாசன் வலியுறுத்தல்
கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
பால் உற்பத்தியாளர் கோரிக்கையை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
பணவீக்கம், விலைவாசி உயர்வு பற்றி பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாரதிய ஜனதா முடக்குகிறது: முகுல் வாஸ்னிக் குற்றச்சாட்டு
அதிமுகவில் நடக்கும் மியூசிக்கல் சேர் போட்டியில் ராமாயணத்தின் வாலியை போல எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்: டிடிவி.தினகரன் பேட்டி
லட்சக்கணக்கான மாணவர்களின் வேலையிழப்புக்கு ஆளுநரே காரணம்: துரை வைகோ குற்றச்சாட்டு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!