போலீசார் வாகன சோதனையில் பைக் திருடிய வாலிபர் கைது
2022-10-08@ 02:33:31

ஆவடி: அயப்பாக்கம் மதுக்கடை முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆவடி அடுத்து அயப்பாக்கம் அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஜெயபால் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 4ம் தேதி இவரது பைக்கை, இவரது அண்ணன் ஜெயசீலன் வாங்கிக்கொண்டு, அயப்பாக்கத்தில் உள்ள மதுகடைக்கு சென்றார். அங்கு, பைக்கை டாஸ்மாக் கடை வாசலில் நிறுத்திவிட்டு, மது வாங்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, நிறுத்தி வைத்திருந்த இடத்தில் வாகனத்தை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்தவர், அவரது தம்பி ஜெயபாலிடம் தெரிவித்தார்.
இது குறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் ஜெயபால் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் மர்ம நபரை, சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து கிடைக்க பெற்ற சிசிடிவி காட்சி மூலமாக தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் திருமுல்லைவாயில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் அயப்பாக்கம் பவானி நகரை சேர்ந்த செந்தில்குமார் (35) என தெரிய வந்தது. தனியார் கம்பெனியில் லேத் வேலை செய்து வருகிறார். போலீசார் நடத்திய விசாரணையில் அய்யப்பாக்கம் மது கடைக்கு முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
போலீஸ் அதிகாரி எனக்கூறி கொண்டு 6 பெண்களை திருமணம் செய்த ‘கில்லாடி’ கைது: 7வது முயற்சியின் போது போலீசில் சிக்கினார்
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் சிறையிலடைப்பு
வேலை வாங்கி தருவதாக விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம் பெண்களை ரு1 லட்சத்திற்கு விற்பனை செய்த பாலியல் புரோக்கர் கைது
கலெக்டரின் தந்தையை தாக்கி நகை கொள்ளை
அவிநாசி அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கிய கல்யாண ராணி கைது: 3வது கணவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றபோது சிக்கினார்
வேறு நபருடன் நிச்சயம் செய்ததால் ஆத்திரம் ஓடும் ஆட்டோவில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன் கைது: காதலுக்காக கப்பல் வேலையை துறந்தவர் கம்பி எண்ணுகிறார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!