தொழிலதிபரை கடத்தியவர் துப்பாக்கி முனையில் கைது
2022-10-07@ 02:54:07

திருவொற்றியூர்: மாதவரத்தில் தொழிலதிபரை கடத்திய வழக்கில் 7 வருடமாக தலைமறைவான குற்றவாளியை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். மாதவரம் தணிகாசலம் நகர் நடேசன் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (25), தொழிலதிபர். இவர் கடந்த 2015ம் ஆண்டு தொழில் போட்டியின் காரணமாக கடத்தப்பட்டார். இது சம்பந்தமாக மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடத்தியவர்களிடமிருந்து தப்பி வந்த கார்த்திக், காஞ்சிபுரம் மாவட்டம், வெள்ளவேடு பகுதியை சேர்ந்த மகேஷ் (41). என்பவர் தான் தன்னை கடத்தினார், என்று போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசார் மகேசை தேடி காஞ்சிபுரம் சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தலைமறைவாக இருந்தார். அதனைதொடர்ந்து பல இடங்களில் தேடியும் அவர் பிடிபடவில்லை. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மகேஷ் பேசின் பிரிட்ஜ் பகுதியில் மறைந்திருப்பதாக மாதவரம் உதவி ஆணையர் ஆதிமூலத்திற்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து, மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் தலைமையில், சென்ற போலீசார் அங்கு உள்ள உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த மகேஷை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை புழல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் அமெரிக்க பெண் பலாத்காரம்
திருமண மண்டபத்தில் நகை திருடிய பெண் கைது
ஏட்டு மனைவியுடன் தவறான உறவு இந்து மக்கள் கட்சி நிர்வாகி கொலை: 8 பேர் கைது
ரூ.2 கோடி மதிப்பு நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்த முதியவர் அதிரடி கைது
ரூ.24 லட்சம் திருடிய காவலாளி கைது
டிவிட்டரில் நடிகை காயத்ரி ரகுராம் குறித்து ஆபாச பதிவு ராணிப்பேட்டை மாஜி பாஜ மாவட்ட நிர்வாகி மீது வழக்கு: கைது செய்ய சென்னை சைபர் க்ரைம் போலீஸ் தீவிரம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!