ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி என கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
2022-10-07@ 00:49:45

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியை சேர்ந்தவர் சுபைர். இவர் தன்னை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான மக்கள் பாதை அமைப்பின் நிர்வாகி என்றும், லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர், இந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் குற்ற புலனாய்வு அமைப்பின் மாவட்ட செயலாளர், ஐபிஎஸ் அதிகாரி என்றும் கூறி வந்துள்ளார். அவர் கூறுவது உண்மைதானா? என்று அறிய சேரம்பாடி பகுதியை சேர்ந்த அப்துல்கபூர் என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எஸ்பி அலுவலகத்தில் தகவல் கேட்டுள்ளார். அப்போது சுபைர் கூறுவது பொய் என்பதும், அவர் வைத்துள்ள முத்திரைகளுடன் கூடிய லெட்டர் பேடுகள் போலியானவை என்பதும் தெரியவந்தது.
மேலும் ஏழை பெண்களிடம், பிரமாண ஒப்பந்த உறுதிமொழி ஆவணத்தில் நிலம், தொழில், வழக்கு சம்பந்தமான பணிகளை மேற்கொள்ள இந்திய மக்களின் பாதுகாப்பு அமைப்பு மூலம் இலவச சட்ட ஆலோசனை பெற சேவை கட்டணம் வழங்குவதாக கூறி கையெழுத்து பெற்று சுபைர் பணம் பெற்றுள்ளதும், சேரங்கோடு வருவாய் கிராமத்தில் நத்தம் பூமியில், வீட்டு மனை இல்லாதவர்களுக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி தலா 5 ஆயிரம் வீதம் பலரிடம் பணத்தை பெற்றுள்ளதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின்படி சேரம்பாடி போலீசார் விசாரணை நடத்தி நேற்று காலை சுபைர் வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்கள், முத்திரைகளை கைப்பற்றினர். பின்னர் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!