துபாயில் இருந்து டெல்லிக்கு விமானத்தின் கடத்திவரப்பட்ட விலை உயர்ந்த வாட்ச்கள் பறிமுதல்: ஒருவர் கைது
2022-10-06@ 18:09:42

டெல்லி: துபாயில் இருந்து டெல்லிக்கு விமானத்தின் மூலமாக விலை உயர்ந்த பொருட்களை கடத்தப்பட்டு வருவதாக டெல்லி விமான நிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து துபாயில் இருந்து இன்று டெல்லி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு பயணியின் பையை சோதனை செய்ததில் அதில் ரோலக்ஸ், ஜேக்கப் அண்ட் கோ, பைகெட் லிம்லைட் ஸ்டெல்லா போன்ற விலை உயர்ந்த 7 வாட்ச்கள் கைப்பற்றப்பட்டன. அதில், ஜேக்கப் அண்ட் கோ என்ற வாட்ச் தங்கம் மற்றும் வைரக்கல் பதிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அந்த ஒற்றை வாட்சின் மதிப்பு ரூ.27.9 கோடியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாட்ச்களுடன் சேர்த்து தங்கம், வைரம் பதிக்கப்பட்ட கைசெயின், ஐபோன் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் பரிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து துபாயில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வந்த பயணி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் மற்றும் அவரது உறவினரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல கிளைகள் அமைத்து வாட்ச் கடை நடத்தி வருவது தெரியவந்தது.
பின்னர் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், கைப்பற்றப்பட்ட 7 வாட்ச்களையும் குஜராத்தை சேர்ந்த பிரபலமான நபருக்கு விற்பனை செய்ய கொண்டு வந்ததாகவும், டெல்லியில் உள்ள 5 நட்சத்திர விடுதியில் வைத்து வாட்ச்களை அந்த நபரிடம் கொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த பிரபலமான நபர் யார் மற்றும் அவரது பெயர் என்ன? என கைதான நபர் இதுவரை கூறவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!