தொடர் விடுமுறையால் குவிந்தனர் சுற்றுலாப்பயணிகள்; குலுங்கியது கொடைக்கானல்
2022-10-06@ 15:09:54

கொடைக்கானல்: தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். குணா குகை, மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர் ராக், பிரையண்ட் பூங்கா என அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் நிரம்பி வருகிறது. மேலும் ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் சைக்கிள் ரைடிங், குதிரை சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
கொடைக்கானலில் நேற்று அதிக குளிர்ச்சி, அதிக வெயில் இல்லாமல் இதமான சூழல் நிலவியது. சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் விடுதிகள், உணவகங்கள், சாலையோர கடைகள், கைடுகளுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. சுற்றுலாப்பயணிகள் குவிந்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். எனவே வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை காலங்களில் கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி
மறைமலைநகர் அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி மிரட்டிய வாலிபர் கைது
காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு தினம் திமுகவினர் அமைதி பேரணி அனைத்துகட்சியினர் மரியாதை
டெல்டாவில் நள்ளிரவு வரை மழை; அறுவடைக்கு தயாராக இருந்த 70,000 ஏக்கர் சம்பா மூழ்கியது: 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு
வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 100% மானியத்தில் விவசாயிகளுக்கு கிணறுகளுடன் பம்பு செட்கள்: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்
திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் வேடந்தாங்கல் அரசு பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடல்: க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!