பழநியில் நெருங்குது சீசன்: பக்தர்கள் குளிக்கும் குளங்களில் கமாண்டோ கண்காணிப்பு தேவை
2022-10-06@ 12:39:02

பழநி: பழநியில் சீசன் துவங்கி உள்ளதால் குளங்களில் குளிக்கும் பக்தர்களை பாதுகாக்க காமாண்டோ படை வீரர்களை பயன்படுத்த வேண்டுமென கோரிக் கை விடுக்கப்பட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கார்த்திகை மாதம் துவங்கி வைகாசி மாதம் வரை ஐயப்ப பக்தர்கள், தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை என பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வரும் பக்தர்கள் பழநி பகுதியில் உள்ள சண்முகநதி மற்றும் இடும்பன் குளத்தில் குளிப்பது வழக்கம். தொடர் மழையின் காரணமாக இடும்பன் குளம் மற்றும் சண்முக நதியில் நீர் நிரம்பி உள்ளது.
குளிக்கும் பக்தர்கள் ஆழமான பகுதிகளுக்கு சென்று விடுவதால் வருடம் தோறும் உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. எனவே, தைப்பூச திருவிழா நேரங்களில் மட்டும் நியமிக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடும்பன் குளம் மற்றும் சண்முகநதி பகுதிகளில் குளிக்கும் பக்தர்களை பாதுகாக்க தீயணைப்பு துறையில் நீச்சலடிப்பதில் நல்ல அனுபவமும், திறமையும் வாய்ந்த கமாண்டோ படையினர் ஈடுபடுத்தப்பட வேண்டுமென்றும், பக்தர்கள் ஆழமான பகுதிகளுக்கு சென்று விடுவதை தடுக்கும் வகையில் தடுப்பு பலகையும், வலையும் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!