தேவரப்பன்பட்டியில் 32 ஆண்டுக்கு பின் நிரம்பிய குளம்: பொதுமக்கள் மகிழ்ச்சி
2022-10-06@ 12:38:04

பட்டிவீரன்பட்டி: தேவரப்பன்பட்டியில் உள்ள கவுண்டர் குளம் 32 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பட்டிவீரன்பட்டி அருகே தேவரப்பன்பட்டியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கவுண்டர் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு அய்யம்பாளையம் மருதாநதி அணை தெற்கு வாய்க்காலிருந்து வரும் தண்ணீர் நீர் ஆதாரமாகும். பல ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால், தெற்கு வாய்க்காலில் தண்ணீர் வரும் வாய்க்கால் தூர்ந்து போய் விட்டது. இதனால் குளத்திற்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் தேவரப்பன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தெற்கு வாய்க்காலை சரிசெய்து தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வாய்க்கால் சீரமைக்கப்பட்டு, தற்போது தெற்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இந்த தண்ணீர் மூலம் சுமார் 32 ஆண்டுகளுக்கு பின்பு தேவரப்பன்பட்டியில் உள்ள கவுண்டர்குளம் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். முன்னதாக குளம் நிரம்பியதையடுத்து தேவரப்பன்பட்டி ஊராட்சி தலைவர் ரேவதி மாரிமுத்து, துணை தலைவர் பிரிதிவிராஜ், அய்யம்பாளையம் திமுக நகர செயலாளர் தங்கராஜ் ஆகியோர் குளத்திற்கு மலர் தூவினர்.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!