ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டம்: ஒன்றிய இணை அமைச்சர் பகவந்த் குமார் தகவல்
2022-10-06@ 11:09:50

நெல்லை: ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் பகவந்த் குமார் தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவிலேயே அதிக அளவில் மின் உற்பத்தி திறன் கொண்ட கற்றாழை டர்பைன் வள்ளியூர் அருகே அமைத்துள்ளது. இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காற்றாலை டர்பைனை ஒன்றிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் பகவந்த் குமார் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் எதிர்காலத்தில் 7 மேகவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட டர்பைன் தயாரிக்க உள்ளதாக கூறினார்.
ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் காற்று வளம் சுமார் 30 ஜிகாவாட் உள்ளதால் அங்கு காற்றாலை நிறுவ உள்ளதகவும் இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழுவதும் மின்சாரம் விடுவிக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளார். 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதை சுட்டிக்காட்டியவர் இதற்கு போதுமான வாய்ப்பும் வளமும் இந்தியாவில் இருப்பதாக கூறினார். சூரிய சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும், பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 ஜிகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும் என இணை அமைச்சர் பகவந்த் குமார் உறுதியளித்துள்ளார்.
மேலும் செய்திகள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்
சோழவரம் ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!