மசூதியில் வெடிகுண்டு போன் செய்தவர் கைது
2022-10-06@ 00:44:59

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் இரவு 8.45மணியளவில், போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், தான் பர்கூர் மல்லப்பாடி மசூதி தெருவில் இருந்து பேசுவதாகவும், அப்பகுதியில் உள்ள மசூதியில், முகமது அலி என்பவர் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக பர்கூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போது, அங்கு ஒருவர் போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது, அவர் தான் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தது தெரிந்தது. விசாரணையில் அவர், திருப்பத்தூர் அடுத்த கந்திலியை சேர்ந்த மாலிக் பாஷா (44) என்பதும், குடிபோதையில் 100க்கு போன் செய்து வெடிகுண்டு வைத்திருப்பதாக புகார் கூறியதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!