சேத்துப்பட்டில் அடமானம் வைத்த செல்போனை் தர ரசீது கேட்ட அடகு கடைக்காரர் கொலை
2022-10-06@ 00:44:56

சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை சேர்ந்தவர் ராஜகோபால்(70). இவர் சேத்துப்பட்டு- போளூர் சாலையில் அடகு கடை நடத்தி வந்தார். இவரது கடையில் சேத்துப்பட்டு அருகே பழம்பேட்டையை சேர்ந்த சியாமு என்ற மூர்த்தி(18) தனது செல்போனை அடகு வைத்து பணம் வாங்கினாராம். கடந்த மாதம் 18ம் தேதி அடகு கடைக்கு சென்ற மூர்த்தி, பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு, செல்போனை கேட்டுள்ளார். அதற்கு ராஜகோபால், ரசீது கொண்டு வா, பிறகு செல்போனை தருகிறேன் என கூறியுள்ளார். அப்போது மூர்த்தி, ரசீது தொலைந்து விட்டது, பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு செல்போனை கொடுங்கள் என கூறினாராம். ஆனால் அடகுக்கடைக்காரர் ராஜகோபால், செல்போனை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, ராஜகோபாலை கைகளால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்தவர் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து மூர்த்தியை கைது செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜகோபால் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் வழக்கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.
Tags:
Sethupattil Mortgage Cellphone Receipt Pawn Shop Murder சேத்துப்பட்டில் அடமானம் செல்போனை் ரசீது அடகு கடைக்காரர் கொலைமேலும் செய்திகள்
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!