ராமநாதபுரத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை 71 வயது டாக்டர் கைது
2022-10-06@ 00:44:55

ராமநாதபுரம்: ராமநாதபுரம், சேதுபதி நகரை சேர்ந்தவர் ஜபருல்லா கான் (71). டாக்டரான இவர், பாரதி நகரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கு கடந்த 2ம் தேதி 19 வயது பெண் ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். பரிசோதனையின் போது டாக்டர் பாலியல் தொல்லை அளித்ததாகவும், இதனால் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும் கூறி ராமநாதபுரம் மகளிர் போலீசில் அப்பெண் புகார் புகாரளித்தார். இதைத்தொடர்ந்து டாக்டர் ஜபருல்லா கான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜபருல்லா கானை அக்.18 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தனக்கு உடல்நிலை பாதித்துள்ளதாக கூறிய ஜபருல்லா கான், சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Tags:
In Ramanathapuram treatment woman sexual harassment 71-year-old doctor arrested ராமநாதபுரத்தில் சிகிச்சை பெண் பாலியல் தொல்லை 71 வயது டாக்டர் கைதுமேலும் செய்திகள்
போலீஸ் அதிகாரி எனக்கூறி கொண்டு 6 பெண்களை திருமணம் செய்த ‘கில்லாடி’ கைது: 7வது முயற்சியின் போது போலீசில் சிக்கினார்
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் சிறையிலடைப்பு
வேலை வாங்கி தருவதாக விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம் பெண்களை ரு1 லட்சத்திற்கு விற்பனை செய்த பாலியல் புரோக்கர் கைது
கலெக்டரின் தந்தையை தாக்கி நகை கொள்ளை
அவிநாசி அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கிய கல்யாண ராணி கைது: 3வது கணவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றபோது சிக்கினார்
வேறு நபருடன் நிச்சயம் செய்ததால் ஆத்திரம் ஓடும் ஆட்டோவில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன் கைது: காதலுக்காக கப்பல் வேலையை துறந்தவர் கம்பி எண்ணுகிறார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!