கள்ளக்காதலை அம்பலப்படுத்திய தொழிலாளியை கொன்று ஆற்றில் சடலத்தை வீசிய வாலிபர் கைது
2022-10-06@ 00:44:53

வெள்ளகோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் உப்புபாளையம் அருகே வேளாகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (51). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பிரேம்குமார் (32). காரை வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த 3ம் தேதி மாரிமுத்துவுக்கும், பிரேம்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாரிமுத்து மாயமானார். இதுபற்றி அவரது மனைவி மல்லிகா வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சந்தேகத்தின்பேரில் பிரேம்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் இருந்த கள்ளக்காதல் பற்றி மாரிமுத்து பலரிடம் கூறியதால் ஆத்திரத்தில் இருந்ததாகவும், அவரை கழுத்து நெரித்து கொன்று காரில் சடலத்தை எடுத்துச் சென்று லக்கம நாயக்கன்பட்டி அருகே அமராவதி ஆற்றில் வீசியதாகவும் பிரேம்குமார் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அமராவதி ஆற்றில் மாரிமுத்துவின் உடலை தேடினர். 3 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் சடலத்தை கைப்பற்றினர். பிரேம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:
Forgery laborer killed in the river teenager arrested கள்ளக்காதலை தொழிலாளி கொன்று ஆற்றில் வாலிபர் கைதுமேலும் செய்திகள்
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
சவுகார்பேட்டையில் அதிகாலை பரபரப்பு சம்பவம் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: போலீஸ் எனக்கூறி காரில் வந்து கைவரிசை
ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவோம் என சிறைக்கு சென்று வந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பாஜ நிர்வாகி என கூறி மோசடிக்கு முயற்சி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விலை உயர்ந்த கேமரா திருடிய 2 பேர் கைது
முன் விரோத தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 7 பேர் கைது
புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டு 2 பேர் சிக்கினர்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!