வேறொருவரை திருமணம் செய்த பள்ளிப்பருவ காதலியை கடத்திய கட்டிட மேஸ்திரி சிக்கினார்
2022-10-06@ 00:44:52

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஒரு மலைகிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் கட்டிட மேஸ்திரியாக உள்ள 22 வயது வாலிபர், தனது காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததால் மன வருத்தத்தில் இருந்துள்ளார். அவர் கடந்த இரு நாட்களுக்கு முன் இரவு அந்த பெண்ணை சந்தித்து வீட்டை விட்டு வெளியேறி எங்காவது சென்று நாம் வாழலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
அவர் கூறியதை நம்பிய அந்த புதுப்பெண் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அன்று இரவு இருவரும் ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து வந்த போலீசார் சந்தேகத்தில் இருவரிடமும் விசாரித்தனர். இதில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இருவரது வீட்டாரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்த புதுப்பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். பள்ளியில் படிக்கும்போது காதலித்த பெண்ணை கடத்த முயன்ற கட்டிட மேஸ்திரியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகள்
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
சவுகார்பேட்டையில் அதிகாலை பரபரப்பு சம்பவம் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: போலீஸ் எனக்கூறி காரில் வந்து கைவரிசை
ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவோம் என சிறைக்கு சென்று வந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பாஜ நிர்வாகி என கூறி மோசடிக்கு முயற்சி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விலை உயர்ந்த கேமரா திருடிய 2 பேர் கைது
முன் விரோத தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 7 பேர் கைது
புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டு 2 பேர் சிக்கினர்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!