ரூ.6.5 கோடி தங்கம் கையாடல் நகைக்கடை மேலாளர் சிக்கினார்
2022-10-06@ 00:44:46

கோவை: நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்யாமல் ரூ.6.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ தங்க்தை கையாடல் செய்த நகைக்கடை மேலாளரை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜூவல்லரியில் இருந்து, தமிழ்நாட்டில் உள்ள பிரபலமாய நகைக்கடைகளுக்கு தங்க நகை ஆபரணங்கள் தயாரித்து மொத்த விலையில் விற்பனை செய்யப்படும். இந்த ஜூவல்லரியில் மார்க்கெட்டிங் மேலாளராக பணியாற்றுபவர் ராஜஸ்தானை சேர்ந்த அனுமன் துவேசி. இவர், கடந்த ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 12 வரை பெங்களூரிலிருந்து நகைகளை கோவையில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்ய கொண்டு வந்திருக்கிறார்.
நகைகளை ஆர்டர்கள் தந்த கடைகளுக்கு விநியோகம் செய்யவில்லை. இதுபற்றி தனியார் ஜூவல்லரி உரிமையாளர் சக்னால் காட்ரி கோவை வெரைட்டிஹால் போலீசில் புகார் அளித்தார். அதில் மொத்தம் 13.5 கிலோ எடையுள்ள ரூ.6.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கையாடல் செய்ததாக கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து அனுமன் துவேசியை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து நகைகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்நிலையில், கடையின் முன்னாள் ஊழியர் தல்பத் சிங் என்ற நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
போலீஸ் அதிகாரி எனக்கூறி கொண்டு 6 பெண்களை திருமணம் செய்த ‘கில்லாடி’ கைது: 7வது முயற்சியின் போது போலீசில் சிக்கினார்
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் சிறையிலடைப்பு
வேலை வாங்கி தருவதாக விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம் பெண்களை ரு1 லட்சத்திற்கு விற்பனை செய்த பாலியல் புரோக்கர் கைது
கலெக்டரின் தந்தையை தாக்கி நகை கொள்ளை
அவிநாசி அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கிய கல்யாண ராணி கைது: 3வது கணவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றபோது சிக்கினார்
வேறு நபருடன் நிச்சயம் செய்ததால் ஆத்திரம் ஓடும் ஆட்டோவில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன் கைது: காதலுக்காக கப்பல் வேலையை துறந்தவர் கம்பி எண்ணுகிறார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!