மக்களவை தேர்தலை சந்திக்க டிஆர்எஸ்சை தேசிய கட்சியாக மாற்றினார் சந்திரசேகர ராவ்: தெலங்கானாவில் அதிரடி
2022-10-06@ 00:43:41

திருமலை: காங்கிரஸ், பாஜ.வுக்கு மாற்றாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற தனது மாநில கட்சியை தேசிய கட்சியாக சந்திரசேகர ராவ் மாற்றியுள்ளார். தனி தெலங்கானா மாநில கோரிக்கைக்காக, ‘தெலங்கானா ராஷ்டிரிய சமிதி’ என்ற கட்சியை தொடங்கிய சந்திர சேகர ராவ் போராடினார். இதனால், 2014ம் ஆண்டு ஆந்திரா பிரிக்கப்பட்டு, தெலங்கானா தனி மாநிலம் உருவானது. பிறகு, தெலங்கானாவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார். 4 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்த அவர், ஓராண்டு முன்பாகவே சட்டப்பேரவையை கலைத்து தேர்தலை சந்தித்தார். அதிலும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
தொடர்ந்து, அடுத்தாண்டு தெலங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்கிறது. இதிலும், தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் சந்திரசேகர ராவுக்கு, பாஜ கடும் சவாலை ஏற்படுத்தி வருகிறது. முதலில் பாஜ.வுடன் நெருக்கமாக இருந்த சந்திரசேகர ராவ், தற்போது அக்கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதோடு, 2024 மக்களவை தேர்தலில் பாஜ.வை தோற்கடிக்க, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ், பாஜ அல்லாத 3வது அணியை உருவாக்குவதற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில், தேசிய அரசியலில் ஈடுபடுவதற்காக மாநில கட்சியாக உள்ள தெலங்கானா ராஷ்டிரிய சமிதியை, தேசிய கட்சியாக நேற்று மாற்றினார். ‘தெலங்கானா ராஷ்டிரிய சமிதி’ என்ற கட்சி பெயரை, ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ என்று பெயர் மாற்றம் செய்தார். இந்நிகழ்ச்சியில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தனது புதிய தேசிய கட்சிக்கு, ஏற்கனவே தான் பயன்படுத்தி வரும் கார் சின்னத்தையே ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் சந்திரசேகர ராவ் முறையிட்டுள்ளார்.
Tags:
Lok Sabha elections TRS National Party Chandrasekhara Rao Telangana மக்களவை தேர்தலை டிஆர்எஸ் தேசிய கட்சி சந்திரசேகர ராவ் தெலங்கானாமேலும் செய்திகள்
அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்
அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணி ஜெயக்குமார்: கு.ப.கிருஷ்ணன் ஒரே போடு
அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!