சோழவரம் அருகே குட்கா கடத்தி வந்த 5 பேர் கைது: 3 கார், 100 கிலோ பறிமுதல்
2022-10-05@ 16:03:35

புழல்: ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பில் போதை இல்லா தமிழகம் என்பதன் தொடர் நடவடிக்கையாக, செங்குன்றம் உதவி ஆணையர் மணிவண்ணன் உத்தரவின்பேரில், நேற்றிரவு சோழவரம் அருகே செம்புலிவரம், செங்காளம்மன் கோயில் எதிரே இன்ஸ்பெக்டர் ஜெகந்நாதன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த 3 கார்களை மடக்கி சோதனை செய்தனர்.
அவைகளில், 100 கிலோ குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காரில் இருந்த 5 பேரையும் பிடித்து, சோழவரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர்கள் செங்குன்றம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சந்திராராம் (24), நாராயணலால் (25), ஜெயபால் (39), கணேசன் (45), தங்கமாரியப்பன் (48) என தெரியவந்தது.
இவர்கள் கடந்த சில மாதங்களாக பெங்களூரில் இருந்து குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை கார்களில் கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கார்கள், 100 கிலோ குட்கா போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!