தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அரசு அனுமதி: செங்கை பத்மநாபன் பாராட்டு
2022-10-05@ 15:42:48

சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொது செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன் அறிக்கை: கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்தது. பின்னர் அப்பேரணியை நவம்பர் 11ம் தேதி நடத்துவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதை பாராட்டுகிறேன். இதுதவிர, தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் சீமான் போன்ற சிலர், இந்து மதத்தையும் கடவுள்களையும் அவதூறாக பேசுவதை கண்டிக்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெறும் அதே நாளில், மத நல்லிணக்க மனித சங்கிலி செயல்பாட்டை ஆதரிக்கும் மாற்று கட்சி தலைவர்கள், எதிர்கால எதிர்மறை விளைவுகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். நம் நாட்டில் அனைத்து மதங்களை சேர்ந்த இயக்கங்களின் அறவழி போராட்டத்துக்கு, சட்டம்-ஒழுங்கை காக்க சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும் செய்திகள்
சென்னையில் வரும் 31-ம் தேதி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு சிறையில் உள்ள 60 கைதிகள் விடுதலை
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடுமையான குளிர், பயணிகள் எண்ணிக்கை குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து
நாளை முதல் பிப். 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!