காஷ்மீரில் தீவிரவாதிகள், ராணுவத்தினர் இடையே மோதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..!
2022-10-05@ 09:26:24

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 இடங்களில் நடந்த என்கவுண்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து டிராச், மொழு ஆகிய இடங்களில் அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். டிராச் பகுதியில் வீடு வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த போது கட்டிடம் ஒன்றில் இருந்து சிலர் பாதுகாப்பு படையை நோக்கி சுட்டனர். ராணுவம் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றது.
இவர்கள் அனைவரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. அதேபோல சோபியான் மாவட்டம் மொழு என்ற இடத்தில் பதுங்கியிருந்த மற்றோரு தீவிரவாதியும் பதில் தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சன்னிலியோன் நிகழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!