முடிவுக்கு வந்த இழுபறி: டிவிட்டரை வாங்க எலான் மஸ்க் சம்மதம்..!
2022-10-05@ 07:24:42

லண்டன்: டிவிட்டரை வாங்க எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளார். உலகின் நம்பர்-1 பணக்காரரான அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், சமீபத்தில் டிவிட்டர் சமூக வலைதளத்தை ரூ.3.5 லட்சம் கோடியில் வாங்குவதாக விலை பேசினார். இதற்கு டிவிட்டர் நிர்வாகம் ஒப்புக் கொண்ட நிலையில், அதில் போலி கணக்குகள் அதிகளவில் இருப்பதாக மஸ்க் குற்றம்சாட்டினார். அதை வாங்கும் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார். இதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் மஸ்க் மீது டிவிட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இச்சூழலில் முன்னதாக டிவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி, டிவிட்டர் பங்கு ஒன்றை 54.20 டாலர்கள் வீதம் கையகப்படுத்தும் வகையில் ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே டிவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் தலா 54.20 டாலருக்கு வாங்கிக் கொள்வதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். இதற்கான ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு விட்டதாக புளூம்பெர்க், ராய்டர் இணையதள செய்தி நிறுவனங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இதையடுத்து டிவிட்டரின் பெரும்பான்மை பங்குகள் எலான் மஸ்க் வசம் செல்ல உள்ளது.
மேலும் செய்திகள்
சிலி நாட்டில் வெப்பக்காற்று காரணமாக ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 13 பேர் உயிரிழப்பு.! மேலும் பலர் காயம் என தகவல்
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.59 கோடியாக அதிகரிப்பு.! 67.69 லட்சம் பேர் உயிரிழப்பு
கடும் நெருக்கடிகளை தருகிறது ஐஎம்எப் மீது பாக். பிரதமர் குற்றச்சாட்டு
எச்1 பி விசா வரம்பினால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்பு
கடனை திருப்பி செலுத்துவதில் இலங்கைக்கு 2 வருட விலக்கு: சீனா உறுதி
அமெரிக்க வான்வௌியில் பறந்த சீன உளவு பலூன்: ராணுவம் தீவிர கண்காணிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!