ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2ம் சீசனுக்கான மலர் அலங்காரம்: வனத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்
2022-10-04@ 00:09:21

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்தபோதிலும், முதல் மற்றும் 2ம் சீசனின்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இரண்டாவது சீசன் துவங்கி நடந்து வரும் நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான சுமார் 4 லட்சம் மலர்செடிகளைக் கொண்டு மலர் பாத்திகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த மலர் செடிகளில் மலர்கள் பூத்து கண்ணிற்கு விருந்தாக காட்சியளிக்கிறது. இவை 10 ஆயிரம் மலர் தொட்டிகள் மாடங்களில் அடுக்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாறுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோ ஆர்கானிக் (இயற்கை வேளாண்மையை நோக்கி) என்ற வாசகம் 2 ஆயிரம் மலர் தொட்டிகளால் மாடங்களில் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி நெகிழி இல்லா மாவட்டமாக மாற்றும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரணி இல்லம் புல் மைதானத்தில் நெகிழிப்பையை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்தும் நோக்கமாக 1000 மலர்த்தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று துவக்கி வைத்தார். ஆயுத பூஜை விடுமுறைக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரத்தை கண்டு ரசித்து செல்கின்றனர்.
Tags:
Ooty Botanical Gardens 2nd Season Flower Decoration Forest Minister ஊட்டி தாவரவியல் பூங்கா 2ம் சீசன் மலர் அலங்காரம் வனத்துறை அமைச்சர்மேலும் செய்திகள்
கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை!.. விவசாயிகளுக்கு வழிகாட்டும் ஈஷாவின் மாதிரி பண்ணை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க மும்முரம்
தமிழ்நாடு வார்த்தையை பயன்படுத்தி முதல்வரின் உருவம் வரைந்த அரசு கல்லூரி மாணவி: பாராட்டுகள் குவிகிறது
நெல்லை, தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்: பணியில் ஈடுபட்டுள்ள 200-க்கு மேற்பட்டுள்ள தன்னார்வலர்கள்
பள்ளி பேருந்து ஏரியில் கவிழ்ந்து 22 மாணவர்கள் படுகாயம்
சத்தியமங்கலம் அருகே குடியிருப்பு பகுதிக்கு வந்து நாயை துரத்திய சிறுத்தை: மயிரிழையில் உயிர் தப்பிய நாய்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!