SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விழுப்புரத்தில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை படுஜோர்-பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது

2022-10-03@ 12:28:28

விழுப்புரம் : ஆயுதபூஜையையொட்டி விழுப்புரத்தில் அலங்காரம், தோரணம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.தமிழகத்தில்  நாளை 4ம் தேதி ஆயுத பூஜை, 5ம் தேதி விஜயதசமிவிழா கொண்டாடப்படுகிறது.   இதையொட்டி பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க தொடங்கி உள்ளனர்.  இதனால் விழுப்புரம், வளவனூர் உள்ளிட்ட நகரபகுதிகளில் நேற்று மக்கள் கூட்டம்  அலைமோதியது. பூ, பழம், காய்கறிகள், கரும்பு, சுண்டல், வெல்லம், சர்க்கரை  போன்றவற்றின் விற்பனை விழுப்புரத்தில் களைகட்டியது.

சரஸ்வதி பூஜை, ஆயுத  பூஜைக்கு வீடு, கடை மற்றும் அலுவலகங்களை சுத்தம் செய்து அலங்காரம் செய்து  பூஜை செய்வது வழக்கம்.  இந்நாளில் தொழில் கருவிகளை தூய்மை செய்து பூஜை  செய்வர். மேலும் கல்வி நிறுவனங்களில் விஜயதசமி தினத்தில் மழலைகளின்  சேர்க்கையும் நடைபெறும். பூஜைகளுக்கு தேவையான திருஷ்டி பூசணிக்காய்,  மாவிலை, சிறிய வாழை
மரங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள், விழுப்புரம் நகரில் பல  இடங்களில் சாலையோரம் வைத்து விற்பனை செய்யயப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்