வெளிநாட்டு சதி தொடர்பான ஆடியோ இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை: பாக். அமைச்சரவை ஒப்புதல்
2022-10-03@ 02:26:00

இஸ்லாமாபாத்: வெளிநாட்டு சதி தொடர்பான ஆடியோ வெளியான விவகாரத்தில் இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது அலுவலக அறையில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் பேசிய ரகசிய பேச்சுகள், ஆடியோவாக சமீபத்தில் வெளியாகி அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வைரலானதை தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் விலக வேண்டும் என்று இம்ரான் கானும், இதர எதிர்கட்சி தலைவர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர்கள் உமர், ஷா மஹ்மூத் குரேஷி மற்றும் அசாம் ஆகியோர், கட்சியின் தலைவரான இம்ரான் கானுடன் அமெரிக்க சைபர்கிரைம் பற்றி பேசுவது தொடர்பாக 2 ஆடியோக்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான், அமெரிக்கா அதிகாரிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, வெளிநாட்டு சதி என கூறப்படும் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது.
மேலும் செய்திகள்
குண்டுவெடிப்பில் 101பேர் பலி எதிரொலி; பாகிஸ்தானில் போலீசுக்கே பாதுகாப்பில்லை: ஆர்ப்பாட்டத்தில் குதித்த போலீசார்
அபுதாபியில் இருந்து புறப்பட ஏர் இந்தியா விமானதில் நடுவானில் தீ: அவசரமாக தரையிறக்கம்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.57 கோடியாக அதிகரிப்பு
இந்தியாவுடனான உறவு நீடிக்கும் பிபிசியின் சுதந்திரத்தை அரசு பாதுகாக்கும்: இங்கிலாந்து அறிவிப்பு
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சவாளி நிக்கி ஹாலே போட்டி?
நிலக்கரிக்கு அதிக கட்டணம் அதானி ஒப்பந்தம் மறுபரிசீலனை: வங்கதேசம் அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!