போலீசார் மீது குற்றம் சாட்டி பெண் தூக்கிட்டு தற்கொலை; எஸ்ஐ உள்பட 6 பேர் மீது வழக்கு
2022-10-03@ 01:22:37

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன், இவரது மனைவி கோகிலா(35). இவருக்கும், பக்கத்தில் வீட்டை சேர்ந்த கண்ணையாவுக்கும் வீட்டு பாதை தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. கண்ணையா புகாரின்படி கீரமங்கலம் போலீசார் கோகிலாவை கைது செய்தனர். இதையடுத்து அவர் நிபந்தனை ஜாமீன் பெற்று தினமும் போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை கோகிலா அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த இடம் அருகே ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில் எனது சாவிற்கு காரணம் மேற்பனைக்காடு குமார், அவரது மனைவியும் போலீசுமான புவனேஸ்வரி மற்றும் என்னை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையம் இழுத்து சென்று சிறைக்கு அனுப்ப காரணமாக இருந்த கீரமங்கலம் எஸ்ஐ ஜெயக்குமார், பெண் போலீஸ் கிரேசி ஆகியோர் தான் என்று எழுதி இருந்தது.
இதையடுத்து உறவினர்கள் மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தில் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குரிய வீட்டு பாதை அகற்றப்பட்டது. இதுதொடர்பாக கோகிலாவின் கணவர் நீலகண்டன் அளித்த புகாரில், கடந்த மாதம் 20ம் தேதி அதிகாலை எனது மனைவியை கீரமங்கலம் போலீசார் வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையம் இழுத்துச் சென்றனர். இதனால் மனஉளைச்சலில் இருந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் என் மனைவி மீது வழக்குப்பதிவு செய்ய தூண்டிய குமார், புவனேஸ்வரி, காமராஜ், துரைமாணிக்கம் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைதொடர்ந்து எஸ்ஐ ஜெயக்குமார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!