வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டில் பராமரிப்பு இல்லாத மகளிர் கழிப்பறை: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
2022-10-02@ 11:51:25

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டு மேலத்தெருவில், பராமரிப்பு இல்லாத மகளிர் கழிப்பறையை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு பேரூராட்சியில் உள்ள 2வது வார்டு மேலத்தெருவில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பெண்களுக்காக கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இங்கு தண்ணீர் வசதி இல்லை.
கழிப்பறைகளுக்கு கதவுகளும் இல்லை. இதனால், பெண்கள் கழிப்பறையை பயன்படுத்துவதில்லை. கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்து, கதவுகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, பராமரிப்பில்லாத கழிப்பறைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து பெண்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தெருவில் குழாய் பதிப்பதற்கு தோண்டிய பேவர் பிளாக் கல்லை மீண்டும் தோண்டிய இடத்தில் பதிக்காமல் உள்ளனர். இதனால், அந்த இடம் பள்ளமாக உள்ளது. உடனடியாக அந்த இடத்தில் பேவர் பிளாக் கல் பதிக்க வேண்டும். குடிநீர் ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் தண்ணீர் கிடைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
இது குறித்து ராமமூர்த்தி கூறுகையில்:
2வது வார்டு மேலத்தெருவில் பெண்களுக்கான கழிப்பறையை பராமரித்து, ஏற்கனவே போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில், பைப் லைன் போட்டு, கழிப்பறை கட்டிடத்தின் மீது தண்ணீர் தொட்டி வைத்து, அதில் தண்ணீர் ஏற்றி, கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். கழிப்பறைகளுக்கான கதவுகள் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
மேலும் செய்திகள்
அருப்புக்கோட்டையில் போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்கள்: மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விருதுநகர் நகராட்சி பகுதியில் மூடிக் கிடக்கும் சமுதாயக் கூடங்களை திறக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
சிவகாசியில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் மூலம் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்: பயணிகள் கோரிக்கை
தைப்பூச திருவிழாவை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு
அண்ணாமலை பல்கலையில் மிகையாக உள்ள பேராசிரியர்கள் உள்பட 1,390 பேர் பிற துறைகளுக்கு பணிநிரவல்: உத்தரவை திரும்ப பெற ஆசிரியரல்லா பணியாளர்கள் கோரிக்கை
சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடையால் தாணிப்பாறை வனத்துறை கேட் வெறிச்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!