வீட்டை உடைத்து 15 சவரன் கொள்ளை
2022-10-02@ 03:14:00

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டை உடைத்து 15 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (35). இவருக்கு திருமணமாகி நிவேதா (30) என்ற மனைவி உள்ளார். இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு, வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். மீண்டும் நேற்று மாலை தங்களது வீட்டிற்கு வந்த இருவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டின் பின்பக்க கதவில் இருந்த பூட்டுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்துகிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் மறைத்து வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து, குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை வைத்து தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் அமெரிக்க பெண் பலாத்காரம்
திருமண மண்டபத்தில் நகை திருடிய பெண் கைது
ஏட்டு மனைவியுடன் தவறான உறவு இந்து மக்கள் கட்சி நிர்வாகி கொலை: 8 பேர் கைது
ரூ.2 கோடி மதிப்பு நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்த முதியவர் அதிரடி கைது
ரூ.24 லட்சம் திருடிய காவலாளி கைது
டிவிட்டரில் நடிகை காயத்ரி ரகுராம் குறித்து ஆபாச பதிவு ராணிப்பேட்டை மாஜி பாஜ மாவட்ட நிர்வாகி மீது வழக்கு: கைது செய்ய சென்னை சைபர் க்ரைம் போலீஸ் தீவிரம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!