இரவு நேரங்களில் கடைகளில் திருடிய வெளி மாநிலத்தினர் 4 பேர் கைது
2022-10-02@ 02:58:38

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இரவு நேரங்களில் கடைகளில் திருடிய வெளிமாநிலத்தினர் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரத்தில் இரவு நேரங்களில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் நேற்று முன்தினம் இரவு ரயில்வே சாலையில் உள்ள 2 கடைகளில் ஷட்டர் பகுதியை துாக்கி வழி ஏற்படுத்தி திருடிய சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
அதன் அடிப்படையில் இரவு நேரங்களில் காஞ்சிபுரம் நகர் பகுதியில் விஷ்ணு காஞ்சி போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரங்கசாமி குளம் பகுதியில் காரை நிறுத்தி விட்டு 4 பேர் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மீது சந்தேகப்பட்ட போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னதால் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு செட்டி (40), கிருஷ்ண யாதவ் (23), கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த விஜயகுமார் (44), கணேஷ்மாலி (42) என தெரியவந்தது. மேலும் இந்த 4 பேரும் காஞ்சிபுரத்தில் பாத்திரக் கடையில் ரூ.30 ஆயிரம் மற்றும் ரயில்வே சாலையில் 2 கடைகளில் ரூ.5,120 திருடியதை ஒப்பு கொண்டனர். எனவே 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!