ஒப்பந்தம் முடிந்த 2 ஆண்டுகளில் எம்.டி., முடித்தவர்களுக்கு சான்று தர வேண்டும்; மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
2022-10-02@ 01:15:59

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் முதுநிலை மருத்துவம் முடித்த டாக்டர்கள் அருண்குமார், சுபோத், முகமது பாயிஸ் உள்ளிட்ட 10 டாக்டர்கள் மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு எதிராக தாக்கல் மனு செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் ஸ்டாலின் அபிமன்யு ஆஜராகி, 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மனுதாரர்கள் நிறைவேற்றவில்லை என்று வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒப்பந்தப்படி படிப்பு முடிந்தவுடன் மனுதாரர்களை அரசு பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அரசு மனுதாரர்களை பயன்படுத்தவில்லை.
ஒப்பந்தப்படி 2 ஆண்டு மனுதாரர்களை பயன்படுத்த வேண்டும் இல்லையென்றால் அவர்களின் சான்றிதழ்களை திரும்ப தரவேண்டும். எனவே, 2 ஆண்டுகள் ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டதால் மனுதாரர்களுக்கு சான்றிதழ்களை மருத்துவ கல்வி இயக்குனரகம் அக்டோபர் 3ம் தேதிக்குள் திரும்ப தர வேண்டும். பணியாற்ற அழைப்பு வந்து பணிக்கு செல்லாத மருத்துவர்களுக்கும், ஒப்பந்தத்தை முழுவதுமாக நிறைவேற்றாத மருத்துவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்று உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில்: பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!