அரியலூரில் விசாரணைக்கு வந்த 16 வழக்குகளில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணையிட்டது பாராட்டுக்குரியது: கே.பாலகிருஷ்ணன்
2022-10-01@ 18:00:38

சென்னை: அரியலூரில் விசாரணைக்கு வந்த 16 வழக்குகளில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணையிட்டது பாராட்டுக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கேபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், அரியலூர் மாவட்டத்தில், நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி திரு. ராம்ராஜ் அவர்கள் முன் வந்த 16 வழக்குகளில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது பத்திரிக்கை செய்தியாகியுள்ளது. இது பாராட்டுக்குரியது.
சுற்றுலா, இன்சூரன்ஸ் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் செய்த தவறுக்காக அபராதம் செலுத்த நேர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் பெற்றுள்ளார்கள். இதுபோன்ற வழக்குகள் மக்களிடையே பிரபலமாக்கப் பட வேண்டும். தரமான சேவை, தொழில் முறைகளை உறுதி செய்ய இந்த நடவடிக்கை அவசியமான ஒன்று. அரசு திட்டமிட்ட விதத்தில், நுகர்வோர் குறைதீர் ஆணையத்தையும், நுகர்வோர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வையும் மக்களிடையே பிரபலமாக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!