இனி உங்களின் தரவுகளை நிறுவனங்கள் சேமிக்க இயலாது: இன்று முதல் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது ரிசர்வ் வங்கி
2022-10-01@ 17:25:51

டெல்லி: டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், பாயிண்ட் ஆப் சேல் கருவிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த டோக்கனைசேஷன் எனப்படும் புதிய தரவுகள் சேர்ப்பு நடைமுறைக்கு ஏற்கெனவே பெரிய வணிகர்கள் ஒப்புதல் அளித்திருந்தனர். டோக்கனைசேஷன் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் பரிவர்த்தனைக்கு உதவும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் ரிசர்வ் வங்கியின் கார்ட் ஆன் ஃபைல் முறையிலான டோக்கன்சேஷனை மாற்றப்பட்டுள்ளன. தற்போது இந்த பணி நிறைவடைந்துவிட்டதால் புதிய டோக்கனைசேஷன் விதிமுறைகள் இன்று முதல் அமலாகின்றன.
இந்த புதிய விதிமுறைகளின்படி இனி ஆன்லைன் பரிவர்த்தனையின் போது நமது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டின் முன்னோடியான விவரங்களை எந்த நிறுவனமும் எடுக்கமுடியாது, சேமிக்கவும் முடியாது. டோக்கனைசேஷன் என்பது நமது கார்டுகளின் உண்மையான விவரங்களை டோக்கன் எனப்படும் மாற்று குறியீட்டுடன் மாற்றியமைப்பதாகும். மொபைல் போன்கள், டேப்ளட்கள், மடிக்கணினிகள், டெக்ஸ்டாப்கள், வாட்ச்கள், கையில் அணியும் பேண்டுகள், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் போன்ற சாதனங்களிலும் டோக்கனைசேஷன் செய்யமுடியும்.
மேலும் செய்திகள்
2023ல் முதன்முறையாக தங்கம் விலை அதிரடி சரிவு: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது..!
பிப்-03: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 - க்கு விற்பனை
பட்ஜெட்டில் சுங்கவரி விதிப்பு எதிரொலி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு: ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்தை கடந்தது; விற்பனையாளர்கள் தகவல்
வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வு: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.44,040க்கு விற்பனை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!
ஒன்றிய பட்ஜெட் எதிரொலி: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது; ஒரு சவரன் ரூ.43,800க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் குமுறல்..!!
அடுத்தடுத்து மரண அடி அதானி நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.7.5 லட்சம் கோடி சரிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!