ஹரியானா குருகிராமில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து... மாலுக்குள் சிக்கியிருந்த 3 பேர் பத்திரமாக மீட்பு
2022-10-01@ 16:58:32

ஹரியானா: ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். குருகிராமில் உள்ள குளோபல் ஃபோயர் மாலில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் பற்றிய தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. இதஹனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீ விபத்தின் போது 3 பேர் மாலுக்குள் சிக்கியிருந்த நிலையில் அவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தீ விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள தீயணைப்புதுறை அதிகாரிகள் வீரர்களின் தீவிர முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறியுள்ளனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சன்னிலியோன் நிகழ்ச்சி அருகே குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு
உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
அதானியின் எப்பிஓ விலகலால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!