5ஜி தொழில்நுட்பம் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும்: பிரதமர் மோடி பெருமிதம்
2022-10-01@ 13:00:15

டெல்லி: அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5 ஜி சேவையை டெல்லியில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 5ஜி தொலைத்தொடர்பு சேவையை முறைப்படி தொடங்கி வைத்தார். இதில் நாட்டின் 3 பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஆகியவை 5ஜி இணையத்தின் முன்மாதிரியை காட்சிபடுத்தி இருந்தன. இவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடி 5ஜி தொடர்பான பிற தொழில்நுட்பங்களையும் ஆய்வு செய்தார். அதில் 5ஜி அடிப்படையிலான ட்ரோன்கள், இணைய பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்களை பிரதமர் பார்வையிட்டார்.
முதல்கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை செயல்பாட்டிற்கு வரவுள்ளது. பின் 5ஜி சேவையை குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், இந்தியாவை அடுத்த வளர்ச்சிக்கு கொண்டு செல்ல 5ஜி சேவை வழிவகுக்கும். 5ஜி சேவை கிராம மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும். ஏழை, எளிய மக்கள் வரை இந்த 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல வேண்டியது நமது பொறுப்பு. மேலும் 5ஜி தொழில்நுட்பம் தொலைத்தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும். 5ஜி அறிமுகம் 130 கோடி இந்தியர்களுக்கு தொலைத்தொடர்பு துறையின் பரிசு. புதிய இந்தியா தொழில்நுட்பத்தின் நுகர்வோராக இல்லாமல் அதனை மேம்படுத்தி செயல்படுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
கைபேசி உற்பத்தியில் இந்தியா உலகளவில் 2வது இடம் பிடித்துள்ளது. உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியை இந்தியா முன்னெடுக்கும். 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என பெருமிதம் தெரிவித்தார். மேலும் 5ஜி மூலம் பல புதிய வாய்ப்புகள் இந்திய இளைஞர்களுக்கு கிடைக்கப்போகிறது. டிஜிட்டல் இந்தியா என்பது இந்திய இளைஞர்களின் வளர்ச்சிக்கான திட்டமாக பார்க்கப்படுகிறது என பேசினார்.
மேலும் செய்திகள்
உதான் திட்டத்தில் ஓசூர் விமான நிலையம் இடம்பெறாது என அறிவிப்பு: தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக திமுக புகார்..!
சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிப்பு; ஒரு நாளைக்கு 3,500 நிதி மோசடி புகார்: பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தகவல்
மேகாலயா சட்டசபை தேர்தல்: 60 சிட்டிங் எம்எல்ஏ உட்பட 379 பேர் வேட்புமனு தாக்கல்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத டபுள் டக்கர் இ-பஸ் சேவை ஐதராபாத்தில் தொடக்கம்: பயணிகள் உற்சாகம்
மகளின் திருமணத்திற்கு கோட்டையை புக்கிங் செய்த ஒன்றிய அமைச்சர்: ராஜஸ்தானில் தடபுடல் ஏற்பாடு
மின் துறையை தனியார்மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: புதுச்சேரியில் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!