உக்ரைன் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைப்பு: அரசாணையில் புடின் கையெழுத்து
2022-10-01@ 01:13:53

மாஸ்கோ: உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய 2 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் அதிகாரப்பூர்வ ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டார். நேட்டோவில் இணைய எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் 7 மாதங்களை கடந்து நீடிக்கிறது. ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் ரஷ்ய படையினர் கைப்பற்றிய கெர்சன், ஜபோரிஜியா பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு கடந்த வாரம் நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலான மக்கள் தங்கள் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்து இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
இந்நிலையில், கிரெம்ளின் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் அரங்கில் கோலாகலமாக நேற்று நடந்த நிகழ்ச்சியில், உக்ரைனின் இந்த பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் அதிகாரப்பூர்வ ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டார். அதில், `தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன், ஜபோர்ஜியா பகுதிகளின் இறையாண்மை, சுதந்திரத்தை அங்கீகரிக்க உத்தரவிடுகிறேன்,’ என்று புடின் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது ஐநா சாசனத்தை மீறும் செயல் என்று ஐநா.வும், உக்ரைன் பிராந்தியங்களை இணைப்பது சட்ட விரோதமான நில அபகரிப்பு என்று அமெரிக்காவும் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரஷ்ய ராணுவ குண்டுவீச்சில் 23 பேர் பலி
உக்ரைன் பிராந்தியங்களை இணைக்கும் நிகழ்ச்சி ரஷ்யாவில் நடந்து கொண்டிருந்த நிலையில், ஜபோரிஜியாவில் பொதுமக்கள் சென்ற வாகனம் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் 23 பேர் பலியாகினர். மேலும், 28 பேர் காயமடைந்தனர்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் பயங்கரம்: பஸ் மீது லாரி மோதல் 18 பேர் பரிதாப பலி
பாகிஸ்தான் மசூதியில் 101 பேர் பலியான விவகாரம்: தாக்குதல் நடத்தியவர் அடையாளம் தெரிந்தது
சுற்றுலா பயணிகளை ஈர்க்க 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க ஹாங்காங் முடிவு
சிலி நாட்டில் வெப்பக்காற்று காரணமாக ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 13 பேர் உயிரிழப்பு.! மேலும் பலர் காயம் என தகவல்
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.59 கோடியாக அதிகரிப்பு.! 67.69 லட்சம் பேர் உயிரிழப்பு
கடும் நெருக்கடிகளை தருகிறது ஐஎம்எப் மீது பாக். பிரதமர் குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!