இங்கிலாந்தில் மன்னர் சார்லஸ் உருவ நாணயம்
2022-10-01@ 01:12:51

லண்டன்: இங்கிலாந்தில் மன்னர் 3ம் சார்லசின் உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் உடல்நலக் குறைவினால் கடந்த மாதம் 8ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, அவரது மகன் இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய மன்னர் 3ம் சார்லஸ் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை ராயல் மின்ட் நேற்று வெளியிட்டது. ராணியின் உருவப்படம் நாணயத்தின் வலது பக்கம் பார்ப்பதுபோல் இருந்த நிலையில் பாரம்பரியத்திற்கு ஏற்ப மன்னரின் உருவப்படம் எதிர் திசையில் இடது பக்கம் உள்ளது. இது, விரைவில் புழக்கத்துக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணி 2ம் எலிசபெத்தின் இறப்பைக் குறிக்கும் வகையில் புதிய 5 பவுண்ட் நாணயம், 50 பென்னி நாணயத்தில் ராணியின் உருவப்படம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மன்னர் 3ம் சார்லசின் உருவத்தை சுற்றி லத்தீன் மொழியில் CHARLES III.D.G.REX.F.D.5 POUNDS.2022 என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘மன்னர் 3ம் சார்லஸ், கடவுளின் அருளால், நம்பிக்கையை பாதுகாப்பார்’ என்று அர்த்தமாகும்.* இங்கிலாந்து முழுவதும் 2,700 கோடி எலிசபெத் ராணி உருவம் பொறித்த நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இடிபாடுகளில் கிடைத்த பொருட்களை கொண்டு விளையாடும் சிறுவர்கள்: குடும்பம், வீட்டை இழந்து தெருவில் நிற்கும் துருக்கி மக்கள்
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியது: துருக்கியில் 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனம்..!!
சீனாவோடு அல்லது உலகில் வேறு எவருடனும் போட்டியிடும் வலிமையான நிலையில் இருக்கிறோம்: அமெரிக்க அதிபர் உரை
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கனமழையால் வெள்ளம்: குடியிருப்புகள், சாலைகளை சூழ்ந்த மழைநீர்..!!
அதிபரின் விமானம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் துப்பாக்கி சூடு
சிறந்த அறிவாற்றல் மாணவியாக 2வது ஆண்டாக இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!