மனித குண்டு தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 19 மாணவர்கள் பலி
2022-10-01@ 01:11:12

காபூல்: ஆப்கானிஸ்தானில் கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் மாணவர்கள் உள்ளிட்ட 19 பேர் பலியாகினர். ஆப்கானிதான் தலைநகர் காபூல் அருகே ஷியா பிரிவை சேர்ந்த ஹஜரா சமூகத்தினர் அதிகம் வசிக்கும் டாஷ்ட் இ பார்ச் பகுதியில், காஜ் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு பல்கலைக் கழக நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், இந்த கல்வி நிறுவனத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் பயிற்சி வகுப்பில் இருந்த மாணவ, மாணவிகள் 19 பேர் பலியாகினர். மேலும், 27 பேர் காயமடைந்தனர்.
சிறுபான்மையினரான ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனால், நேற்றயை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மேலும் செய்திகள்
3,900 பேர் பணி நீக்கம் ஐபிஎம் நிறுவனம் அறிவிப்பு
உக்ரைனுக்கு மீண்டும் அமெரிக்கா உதவி: 31 அதிநவீன பீரங்கிகளை அனுப்புவதாக அறிவிப்பு
இம்ரான்கான் பாதுகாப்பு வாபஸ்
ஆண்டுக்கு ரூ.16 கோடி செலவிட்டு இளைஞனாக மாற முயலும் 45 வயது தொழிலதிபர்
2 ஆண்டுக்கு பின் தடை நீங்கியது பேஸ்புக்கில் மீண்டும் டிரம்ப்
உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியம்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கருத்து
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!